Saturday, April 13, 2013

மதுரையில், பதினெண் சித்தர்கள் ஆலயம் சார்பில், உலக சித்தர்கள் தின மாநாடு, ஏப்.,14 ல் நடக்கிறது. சித்தர்கள் ஆலய நிறுவனர், விஜயராகவ் கூறியதாவது: பசுமலை திருமலை நாயக்கர் கல்லூரியில் நடக்கும் மாநாட்டில், சித்தர்களின் ஆற்றலை உணர வைத்து, சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துரைப்போம். சித்தர்களின் வாழ்க்கை குறிப்பு, சமுதாயத்திற்கு அவர்கள் உணர்த்த விரும்பிய கருத்துக்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்; தசவாயு மருத்துவ பயிற்சி விளக்கமும் கிடைக்கும் என்றார்.

பங்கேற்க விரும்புவோர், 82203 53559 ல் தொடர்பு கொள்ளலாம்.


Tagged:

0 comments:

Post a Comment