Friday, January 2, 2015

நமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Pothigai 2015

கேரள வனத்துறையின் தகவல்படி வரும் ஜனவரி 8ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை பொதிகை செல்லலாம். அதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. http://www.forest.kerala.gov.in/ என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

இந்த வருடம் ஜனவரி 15ம் தேதி அன்று செல்லலாம் என்று குருவருளால் முடிவு செய்துள்ளோம். எங்களுடன் இணைந்து வர விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து தங்கள் தொலைபேசி என்னுடன் தங்கள் விவரத்தை பின்னூட்டத்தில் (comments) இட்டால் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய எதுவாக இருக்கும். அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

பொதிகை தொடர்பான ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 7448812399.