Saturday, January 9, 2016

**UPDATE**

குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது. வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிருந்து கிளம்புகிறோம். இந்த முறை சென்னையிலிருந்து இரண்டே பேர் தான். மதுரையிலிருந்து கிளம்பும் மூன்று  நண்பர்கள் விதுராவில் எங்களுடன் இணைந்து கொள்கிறார்கள். வேறு யாரவது இந்த தேதியில் கிளம்புவதாக இருந்தால் தெரிவிக்கவும். சேர்ந்து போகலாம்.


****************************************************************************************************


நமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.



கேரள வனத்துறையின் தகவல்படி, வரும் 11ம் தேதி காலை 11 மணிக்கு முன்பதிவு ஆரம்பமாகிறது. http://serviceonline.gov.in/serviceLinkHome.html?serviceToken=kjSTCZISXJ&OWASP_CSRFTOKEN=7STR-P1XK-AT3Y-RML5-N547-OS8X-LLHW-TNEX#! என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

சென்ற வருடம் காலை 8 மணிக்கு ஆரம்பித்த முன்பதிவு வெறும் அரை மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் பதிவு செய்ய முடியவில்லை.  இந்த வருடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். பார்ப்போம். 

மேலும் இந்த வருடம் என்று டிக்கெட் கிடைக்கிறதோ அன்று செல்லலாம் என்ற முடிவுடன் இருக்கிறோம். எங்களுடன் இணைந்து வர விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து தங்கள் தொலைபேசி எண்ணுடன் தங்கள் விவரத்தை பின்னூட்டத்தில் (comments) இட்டால் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய எதுவாக இருக்கும். அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

பொதிகை தொடர்பான ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 7448812399.

Tagged: , , , ,

1 comment: